Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்மாபேட்டையில் குடிதண்ணீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம்

ஏப்ரல் 09, 2021 10:54

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே குடிதண்ணீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் 8வது வார்டு புத்தூர் கீழத்தோப்பில் 50-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த 5 தினங்களாக குடிதண்ணீர் வராமல் பெண்கள் நீண்டதூரம் சென்றும் தண்ணீர் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக ஆபரேட்டரிடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் மனுகொடுத்தும் இதுவரை குடிதண்ணீர் வரவில்லை.

போர்கால அடிப்படையில் புத்தூர் கீழத்தோப்பில் உள்ள ஆழ்துளை கினற்றை ஆய்வு செய்து சரிசெய்து குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காலிகுடங்ளுடன் புத்தூர் கீழத்தோப்பில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நிர்வாகிகள் பிரபு, திருநாவுக்கரசு, ராஜேந்திரன் மற்றும் பெண்கள் காலிகுடங்களுடன் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்